Kamaraj


படித்தேன் ...கண்களில் கண்ணிர்
பெருகியது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்..
கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை
...
அருகே.. காரில் சென்று
கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான.
நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள்
சொந்த ஊர் இந்த பக்கம் தானே..?
என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம்
தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார்
காமராஜர்..!!
"அப்படியானால் உங்கள் தாயாரை
பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு
செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு
அவர்கள் கேட்க..
"இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?"
என்று காமராஜர் மறுக்கிறார்..!!
அதற்கு நேரு அவர்கள்...
"இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள்
தாயாரை பார்க்காமல் சென்றால்..
நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக
வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச்
செல்லுங்கள்..!!" என்று அன்பு
கட்டளையிடுகிறார்
ஆமோதித்த காமராஜர்..
வண்டி சற்று தூரம் சென்றதும்..
ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி
ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த
சொல்கிறார்..!!
அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு
புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!!
அந்த நிலங்களில் பெண்கள் களை பறித்து
கொண்டிருந்தனர்..!!
தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து..
செல்ல சொன்னால் இப்படி
அத்துவான வெயிலில்.. வண்டியை
நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன்
வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு..
காமராஜர்
களை பறித்து கொண்டிருக்கும்
பெண்கள்.. கூட்டத்திலிருந்து வயதான
பெண்மணி.. ஒருவரை அழைக்கிறார்...
"ஆத்தா நான் காமராசு வந்து
இருக்கிறேன்.."!! என்று கூவுகிறார்..!!
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்..
"காமராசு வந்திட்டியாப்பா..
நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை
கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம் நெகிழ..
அருகில் வருகிறார்.. காமராஜரின்
தாயார்..!!
தாயும் மகனும் அளவளாவிக்
கொள்கிறார்கள்..!!
பிறகு நேரு அவர்களை காட்டி.. அறிமுக
படுத்துகிறார் காமராஜர்..!!
நேருவால்
தன் முன்னால் நடப்பதை பார்த்து.. நம்ப
முடியாமல் சிலையாக நிற்கிறார்..!!
அவர் தான் நம் காமராஜர்.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர்
பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

No comments:

Post a Comment